ஆலம்பரை

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது பண்டைய நாட்களில் இடைக்கழி நாட்டுக்குட்பட்டதாக விளங்கியிருக்கிறது.

பழங்காலத்தில் துறைமுகப்பட்டினமாக விளங்கிய மரக்காணம் இவ்வூருக்கு அருகில் உள்ளது. ஆலம்பறையில் கி.பி. 17-18 ஆம் நுhற்றாண்டில் இருந்து வந்த சமூக பண்பாட்டை அறியும் நோக்கில் இங்குள்ள கோட்டைக்குட்பட்ட பகுதியில் அகழாய்வு நடைபெற்றது.

மூன்று அகழாய்வுக்குழிகள் அமைக்கப்பட்டன. இதில் சுடுமண்ணாலான பொருட்கள், செம்பு பொருட்கள், இரும்பு, கண்ணாடி மற்றும் &டவ;யத்தினால் செய்யப்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கருங்கல்லினால் ஆன பீரங்கி குண்டுகள், ஃபோர்சிலைன் வகை ஓடுகள், தக்கிளி, சுடுமண் விளக்குகள், புகைப்பான் மற்றும் நாணயங்கள் செய்யும் சுடுமண்ணாலான அச்சுகளும் இவ்வகழாய்வில் கிடைத்தன.

ஆலம்பரையில் கி.பி. 17-18ம் நுhற்றாண்டில் நடைபெற்ற வணிகம் குறித்த தடயங்களும், இங்கு வாழ்ந்த மக்களின் சமூக-கலாச்சார அம்சங்களையும் இவ்வகழாய்வானது வெளிப்படுத்தியது.