ஆர்க்காடு இஸ்லாமிய அகழ்வைப்பகம் - வேலூர்

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 a.m to 5.00 p.m

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

:Thiru J.Ranjith, Curator- I/C

தொலைபேசி

: ------------

 

முகலாய மன்னனான ஔரங்கசீப்பின் படைத்தலைவன் கல்பிகுஆர்கான் பதவியில் அமர்த்தப்பட்டு ஆர்க்காட்டில் முகலாய மன்னர் ஆட்சியை நிர்வகித்து வந்தான். கி.பி 1698-ஆம் ஆண்டு (கி.பி. 1690-1703) ஆர்க்காட்டினை தமது ஆட்சியின் கீழ் நிர்வகித்து வந்தார். இவரது காலத்தில் ஆர்க்காடு “கர்நாடகப்பகுதி” –யின் தலைநகராகத் திகழ்ந்தது. இக்காலக்கட்டத்தில் பல கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆர்க்காட்டினை ஆண்ட கடைசி மன்னன் கௌசிகான் (கி.பி. 1842-1855) ஆவான். லார்டி டெல்ஹெசி பிரபு, டாக்டிரின் ஆப்லேப்சஸ் என்ற சட்டத்தின் மூலம் கர்நாடகப் பகுதியினை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். 1982- ஆம் ஆண்டு இஸ்லாமிய கட்டடக்கலை, கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கூறும் முகமாக இவ்வகழ்வைப்பகம் தொடங்கப்பட்டது. வேலூரிலிருந்து, ஆர்க்காடு 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

காட்சிப் பொருட்கள்:

கற்சிற்பங்கள், சுடுமண் உருவங்கள், காசுகள், இஸ்லாமிய கலைப்பொருட்கள், பீங்கான் பொருட்கள், இரும்புப் பொருட்கள், மரப்பொருட்கள் ஆகியவற்றுடன் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.